skip to main |
skip to sidebar
-
காலையில், இட்லிக்கு ஊற்றிக் கொள்ள நல்லெண்ணெயை இலேசாகக் காய்ச்சி
சிறிது கடுகு, பெருங்காயம் தாளித்து உபயோகப்படுத்தினால் இன்னும் இரண்டு
சாப்பிடத் தோன்றும்.
- தட்டை செய்கையில் அனைத்தும் ஒரே அளவில்
காணப்பட வேண்டுமானால், கையால் தட்டி வட்டமாக்கிய பிறகு வட்டமான மூடி அல்லது
பிஸ்கெட் கட்டரில் வெட்டிப் பொரித்தால் வாய்க்கு ருசியோடு கண்ணுக்கும்
ஒரே வடிவமாக காணப்படும்.
- பூரி சுட்ட சிறிது நேரத்திலேய நமத்து
போய் தோசையாகிவிடாமல் இருக்க வேண்டும் என்றால், பூரிக்கு மாவு
பிசையும்போது கொஞ்சம் சர்க்கரை சேர்த்துப் பிசைந்தால் பொரித்த பூரி அதிக
நேரம் நமத்துப் போகாமல் இருக்கும்.
- பிரட்டை ஸ்லைஸ் செய்யாமல்
வாங்கி நீளவாக்கில் வெட்டவும். அதன்மீது வெண்ணெய் அல்லது ஜாம், சாஸ்,
சட்னி, கடலை, குருமா என எது வேண்டுமானாலும் தடவி ரோல் பண்ணி வட்டமாகக் கட்
பண்ணிக் கொடுத்தால் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள்.
- சுவையான,
மணமான வெங்காய அடை செய்வதற்கு, வெங்காய அடை செய்யும் போது, சின்ன
வெங்காயத்தை பொடியாக நறுக்கி, ஒரு ஸ்பூன் எண்ணெய்விட்டு, வதக்கி, மாவில்
கலந்து அடை செய்தால், கம்மென்று மணம் மூக்கைத் துளைக்கும்.
- பரோட்டா செய்யும் போது கவனிக்க வேண்டியவை
- வீட்டில் எப்போதாவது பரோட்டா செய்தீர்கள் என்றால் சில குளறுபடிகளையும் செய்துவிடுவோம்.
- அதை தவிர்க்க சில யோசனைகள்
- பரோட்டாவிற்கு
உள்ளே மசாலா வைத்து செய்யும்போது ஸ்டஃப்பிங் டிரை ஆக இருக்க வேண்டும்
என்பது உங்களுக்குத் தெரியும். இல்லை என்றால் பரோட்டா ஊறி பொத பொத
என்று ஆகிவிடும்.
- முள்ளங்கி வைத்து பரோட்டா செய்தால்,
முள்ளங்கியில் அதிக நீர் இருக்கும், அதனை தனியாக
எடுத்துவிடவும். அதன் தண்ணீரை வீணாக்காமல் அதிலேயே பரோட்டாவிற்கு
மாவு பிசையலாம்.
- தனியாப்பொடி, ஜீரகப்பொடி தவிர, கைநிறைய நறுக்கிய
கொத்துமல்லித் தழை சேர்த்து ஸ்டஃப்பிங் செய்து பரோட்டா செய்தால்,
பரோட்டா நன்றாகவும் இருக்கும் உடலுக்கும் நல்லது.
- இது வட
இந்தியர்கள் அதிகமாக செய்யும் சமையல் முறையாகும். எதையும் நாம்
தனியாக ஒதுக்காமல், எல்லாவற்றையும் செய்து பார்ப்போம். சரியாக
வரும்வரை அதை விடுவதில்லை என்று முடிவெடுப்போம்.
0 comments:
Post a Comment