4- 6 பேருக்கு போதுமானது
தேவையான பொருட்கள் :
- புளுங்கல் அரிசி - 1/2 சுண்டு
- நற்சீரகம் - 25 கிராம்
- மிளகு - 25 கிராம்
- மஞ்சள் - 1" நீள துண்டு
- கற்கண்டு - 250 கிராம்
- தேங்காய் - 1
- உப்பு - அளவிற்கு
செய்முறை :
- அரிசியை கழுவி , மூன்று மணி நேரம் ஊற வைத்து எடுத்து அதனுடன் மஞ்சள் , மிளகு , நற்சீரகம் என்பவற்றை சேர்த்து பசை போல அரைத்து எடுத்துக் கொள்க . ( தேவையாயின் சிறிதளவு நீர் சேர்த்து அரை க்குக )
- தேங்காயை துருவி சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு பிழிந்து , 31/2 தம்ளர் பாலை எடுத்து வைத்துக் கொள்க .
- கற்கண்டாய் ஓரளவு சிறுதுண்டுகளாக நொறுக்கி வைத்துக் கொள்க .
- பின்பு தாய்ச்சியில் அரைத்த கூட்டையும் , கட்கன்டையும் போட்டு பாலையும் விட்டு கலக்கி கொண்டபின் அடுப்பில் வைத்துக் காய்ச்சவும் . கலவி கூழ் பதமாக தடிக்க தொடங்கியதும் அளவிற்கு உப்பு சேர்த்து கலக்கி இறக்கி சூடுடனேயே பரிமாறலாம் .
0 comments:
Post a Comment