புளிக்கஞ்சி

 photo pulikanchi_zps0ddf7793.jpg

 
3 - 4 பேருக்கு போதுமானது

தேவையான பொருட்கள் :



  1. புழுங்கலரிசி - 1 சுண்டு
  2. நெத்தலி கருவாடு - 100 கிராம்
  3. வெங்காயம் - 100 கிராம்
  4. செத்தல் மிளகாய் - 10
  5. மஞ்சள் - 1 சிறிய துண்டு
  6. மிளகு - 10
  7. உள்ளி - 10 பல்லு
  8. கறிவேப்பிலை - 2 நெட்டு
  9. தேங்காய் - பாதி
  10. பழப் புளி ( விதை நீகியக்து ) - ஒரு பாக்களவு
  11. உப்பு - அளவிற்கு
  12. தண்ணீர் - 3 1/2 போத்தல்

செய்முறை :
  • தேங்காயை துருவி ஒரு தம்ப்ளர் தண்ணீரை சிறிது சிறிதாக விட்டு பால் பிழிந்து வைத்துக் கொள்க .

  • கருவாட்டை கழுவி வைத்துக் கொள்க 

  • வெங்காயத்தை துப்பரவாக்கி அளவான துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்க .

  • பழப்புளியை ஒரு தம்ளர் தண்ணீரில் கரைத்து வைத்துக் கொள்க .

  • செத்தல் மிளகாய் , உள்ளி ,மிளகு , மஞ்சள் என்பவற்றை அளவிற்கு நீர் சேர்த்துப் பசுந்தையாக அரைத்து எடுத்துக் கொள்க.

  • பின்பு பாத்திரத்திலிட்டு 3 போத்தல் தண்ணீரைக் கொதிக்க வைத்து நன்கு கொதித்த பின்பு அரிசியை கழுவிப்போட்டு அவியவிடவும் . அரிசி அரைப் பதமாக அவிந்தவுடன் கருவாடு , வெங்காயம் கறிவேப்பிலை என்பவற்றை இட்டு மூடி அவியவிடவும் .

  • அரிசி நன்றாக அவிந்ததும் அரைத்த கூட்டு , பால் கரைத்து வைத்துள்ள பழப்புளி அளவிற்கு உப்பு என்பவற்றையிட்டு கலந்து மூடி வாசம் வரும்வரை அவியவிட்டு இறக்கி சூட்டுடனேயே பரிமாறினால் அதிக சுவையாக இருக்கும் .

0 comments:

Post a Comment

Flag Counter