பார்லிக்கஞ்சி

 photo BAA0BBE0BB00BCD0BB20BBF0B950BCD0B950B9E0BCD0B9A0BBF0_zps417c3179.jpg

 


4 பேருக்கு போதுமானது

தேவையான பொருட்கள் :
  1. பார்லி - 2 மே . க ( நிரப்பி )
  2. உப்பு - அளவிற்கு
  3. தண்ணீர் - 5 தம்ப்ளர்

செய்முறை :
  • பார்லியை கழுவி வைத்துப் பாத்திரத்தில் போட்டு முக்கால் மணி நேரம் ஊறவிட்டு மீண்டும் தண்ணீரை வடித்துவிட்டு பார்லியை தாய்ச்சியில் போட்டு 5 தம்ளர் தண்ணீரை விட்டு வேகவிடவும் .

  • பார்லி கஞ்சி வேகும்போது  நீர் மெல்லிய றோஸ் நிறத்தை அடையும் பருவத்தில் இறக்கி வடித்து அளவிற்கு உப்பு சேர்த்துக் கலக்கி சூட்டுடனேயே பரிமாறலாம் .

குறிப்பு :
  • உப்புக்கு பதிலாக தேசிப்புளியும் சீனியும் விருப்பதிற்கு ஏற்றவாறு சேர்த்து பரிமாறலாம் 

  • பார்லிக்கு பதிலாக சவ்வரிசியை பாவித்து இவ்வனமே கஞ்சி தயாரித்துக் கொள்ளலாம் .

  • சவ்வரிசியாயின் மெல்லிய சாம்பல் நிறத்தை அடையும்போது இறக்கி வடிக்கவும்

0 comments:

Post a Comment

Flag Counter