4 - 6 பேருக்கு போதுமானது
தேவையான பொருட்கள் :
தேவையான பொருட்கள் :
- பச்சை அரிசி - 1 சுண்டு ( நிரப்பி )
- நற்சீரகம் - 2 மே. க ( நிரப்பி )
- மிளகு - 1 தே . க ( நிரப்பி )
- மஞ்சள் - 2" துண்டு
- உப்பு - அளவிற்கு
- தண்ணீர் - 4 போத்தல்
செய்முறை :
- தேங்காயை துருவி ஒரு போத்தல் தண்ணீரை சிறிது சிறிதாக விட்டு பாலை பிழிந்தெடுத்துக் கொள்க .
- சீரகம் , மிளகு , மஞ்சள் மூன்றையும் எடுத்து தண்ணீரை அளவிற்கு விட்டு பசுந்தையாக அரைத்துக் கொள்க .
- பின்பு அரைத்த கூட்டை தீங்கை பாலில் இட்டு கரைத்து வைத்துக் கொள்க
- பாத்திரத்தில் 3 போத்தல் தண்ணீரை விட்டு கொதிக்க வைத்து , கொதித்த பின்பு அரிசியை கழுவிப் போட்டு அவியவிடவும் . அரிசி முக்கால் பதமாக அவிந்த பின்பு , கரைத்து வைத்துள்ள தீங்கை பால் , அளவுக்கு உப்பு என்பவற்றை இட்டு மூடி அவியவிடவும் .
- கஞ்சி நன்றாக பொங்கி கொதித்து அவிந்து வாசனை வரத் தொடங்கியதும் நன்றாக துழாவி இறக்கி சூட்டுடனே பரிமாறினால் அதிக சுவையாக இருக்கும் .
0 comments:
Post a Comment