2 - 3 பேருக்கு போதுமானது
தேவையான பொருட்கள் :
- அறோட்டுமா - 4 மே. கரண்டி ( நிரப்பி )
- சீனி - 5 மே. கரண்டி ( நிரப்பி )
- உப்பு - அளவிற்கு
- தண்ணீர் - 4 தம்ளர்
செய்முறை :
- ஒரு தம்ளர் தண்ணீரில் 4 மே. கரண்டி அறோட்டு மாவைக் கரைத்து வைத்துக் கொள்க
- மிகுதி 3 தம்ளர் தண்ணீரை பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க வைத்து , நன்கு கொதித்த பின்பு இறக்கி இரண்டு நிமிடம் வைத்து அதனுள் கரைத்து வைத்துள்ள ஆரோட்டுமா கரைசலை ஊற்றி கட்டி படாமல் நன்கு கலக்கி பாத்திரத்தை மீண்டும் அடுப்பில் வைத்துக் காய்ச்சுக .
- கலவை ஓரளவு தடிக்கத் தொடங்கும் பொழுது சீனியையும் சேர்த்து நன்கு துளாவி காய்ச்சி இறக்கி ஓரளவு ஆறியபின் பரிமாறலாம் .
குறிப்பு :-
சுகதேகிகளுகாயின் தண்ணீருக்கு பதிலாக பாலை விட்டு காய்ச்சி கொள்ளலாம் .
0 comments:
Post a Comment