முக்கூட்டு கூழ்

 photo kelvaragukool_zpsa99a4c4e.jpg
 


4 - 5 பேருக்கு போதுமானது

தேவையான பொருட்கள் :

  1. குரக்கன் - 250 கிராம்
  2. பொட்டுக் கடலை - 250 கிராம்
  3. கச்சான் முத்து - 250 கிராம்
  4. ஏலப்பொடி - 1 தே . க .( மட்டமாக )
  5. சீனி - 6 மே. கரண்டி ( நிரப்பி )
  6. உப்பு - அளவிற்கு
  7. தண்ணீர்/ தேங்காய் பால்  - 5 தம்ளர்

செய்முறை :

  • குரக்கன் கடலை என்பவற்றை தனித் தனியாக துப்பரவாக்கி கழுவி காய வைத்துக் கொள்க .

  • கச்சான் முத்து கடலை என்பவற்றை தனித்தனியாக பொன்னிறமாக வறுத்தெடுத்து குரக்கனோடு சேர்த்து திரிதேடுத்துக் கொள்க .

  • திரிதேடுத்த மாவில் ஒரு தம்ளர் மாவை எடுத்து தாய்ச்சியில் போட்டு 6 மேசை கரண்டி சீனி இட்டு கலந்து 5 தம்ளர் தண்ணீர் விட்டு கரைத்து அடுப்பில் வைத்துக் காய்ச்சுக .

  • கலவை தடிக்கத் தொடங்கியதும் உப்பு ஏலப்பொடி என்பன சேர்த்து கல்லாகி இறக்கி ஆரிய பின் பரிமாறலாம் .

0 comments:

Post a Comment

Flag Counter