4 - 5 பேருக்கு போதுமானது
தேவையான பொருட்கள் :
- குரக்கன் - 250 கிராம்
- பொட்டுக் கடலை - 250 கிராம்
- கச்சான் முத்து - 250 கிராம்
- ஏலப்பொடி - 1 தே . க .( மட்டமாக )
- சீனி - 6 மே. கரண்டி ( நிரப்பி )
- உப்பு - அளவிற்கு
- தண்ணீர்/ தேங்காய் பால் - 5 தம்ளர்
செய்முறை :
- குரக்கன் கடலை என்பவற்றை தனித் தனியாக துப்பரவாக்கி கழுவி காய வைத்துக் கொள்க .
- கச்சான் முத்து கடலை என்பவற்றை தனித்தனியாக பொன்னிறமாக வறுத்தெடுத்து குரக்கனோடு சேர்த்து திரிதேடுத்துக் கொள்க .
- திரிதேடுத்த மாவில் ஒரு தம்ளர் மாவை எடுத்து தாய்ச்சியில் போட்டு 6 மேசை கரண்டி சீனி இட்டு கலந்து 5 தம்ளர் தண்ணீர் விட்டு கரைத்து அடுப்பில் வைத்துக் காய்ச்சுக .
- கலவை தடிக்கத் தொடங்கியதும் உப்பு ஏலப்பொடி என்பன சேர்த்து கல்லாகி இறக்கி ஆரிய பின் பரிமாறலாம் .
0 comments:
Post a Comment