25- 30 தோசைகள்
தேவையான பொருட்கள் :-
தேவையான பொருட்கள் :-
- உடைத்த உழுந்து - 1 சுண்டு / 250 கிராம்
- பச்சை அரிசி - 2 சுண்டு
- வெந்தயம் - 1 தே . க . ( நிரப்பி )
- மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
- உப்பு - அளவிற்கு
- மிளகு தூள் - அளவிற்கு
- முட்டை - 8 - 10
- நல்லெண்ணெய் / நெய் - 1/4 போத்தல் / ஒரு தம்ளர்
- அப்பச் சோட - 1 சிட்டிகை
தாளிதம்
- சிறிதாக வெட்டிய வெங்காயம் - 2 மே . க . ( நிரப்பி )
- சிரிதாக வெட்டிய கறிவேப்பிலை - 1 தே . க . ( நிரப்பி )
- பெருஞ்சீரகம் - 1 சிட்டிகை
- கடுகு - 1 சிட்டிகை
- தேங்காய் எண்ணெய் - 2 மே . க .
செய்முறை :-
- உளுந்தை துப்பரவாக்கி மூன்று மணி நேரம் ஊறவைத்து , தோல் நீக்கி கழுவிக் களைந்து தேவைக்கு அளவாக நீர் சேர்த்து பசுந்தையாக அரைத்து வைத்துக் கொள்க .
- அரிசியை துப்பரவாக்கி கழுவி 3 மணி நேரம் ஊற வைத்து இடித்து அரிக்குக. அரிக்கும்போது வரும் குறுணலை சுளகில் இட்டு கொழித்து 1/2 சுண்டு நடுத்தர அளவுடைய குறுணலை எடுத்து வைத்த பின்பு , முகுதி குருனலை இடித்து மாவை அரித்து எடுத்துக் கொள்க .
- பின்பு இரண்டு தம்ளர் தண்ணீரை கொதிக்க வைத்து தண்ணீர் நன்கு பொங்கி கொதித்ததும் , 1/ 2 சுண்டு குருனலை இட்டு நன்கு துழாவி செர்த்துக்க் கொண்ட பின்பு உடனே அடுப்பிலிருந்து இறக்கி 1/2 தம்ளர் குளிர்ந்த நீர் விட்டு நன்கு கல்கி கலவையை ஆறவைத்துக் கொள்க .
- அரைத்து வைத்துள்ள உளுந்தினுள் ஆரிய குறுணல் கஞ்சியை ஊற்றி நன்கு சேர்த்துக் கொண்ட பின்பு , மாவையும் இட்டு சேர்த்துக் கரைக்குக . நீர்த்தன்மை காணாதுவிடின் தேவையான அளவு தண்ணீரை விட்டு கூழ் பதமாக கரைத்து 10- 12 மணி நேரம் வரை புளிக்கவைத்துக் கொள்க .
- தாய்ச்சியில் எண்ணையை காயவைத்து கடுகை போட்டு வெடிக்க வைத்த பின்னர் அதனுள் வெங்காயம் , கரிவேப்பிலை , பெருஞ்சீரகம் என்பன இட்டு தாளித்து இறக்கி புலிக்க வைத்துள்ள தோசை மாவு கரைசலில் ஊற்றி 1 சிட்டிகை அப்பசோடாவும் உப்பும் அளவுக்கு இட்டு நன்றாக அடித்து கரைத்துக் கொள்க .
- முட்டைகளை உடைத்து பாத்திரத்தில் விட்டு அளவுக்கு உப்பு , மிளகு தூள் என்பன சேர்த்து அடித்துக் கொள்க .
- பின்பு தோசை கல்லில் சிறிதளவு நெய் ஊற்றி பரவலாக பிரட்டிகொண்டபின்பு கரைத்து வைத்துள்ள தோசை மா கரைசலை மேல்லிய தோசைகளாக வார்த்து அதன் மீ சிறிது நெய்யை ஊற்றி சிறிது நேரம் வேகவிட்ட பின்பு , அதன்மேல் அடித்த முட்டையில் 2 மே. கரண்டியை பரவலாக ஊற்றி தோசையை பாதியாக மடித்து இருபுறமும் மாறி மாறி திருப்பிப் போட்டு பொன்னிறமாக வேகவிட்டு எடுத்துப் பரிமாறலாம் .
- இவ்வண்ணமே தோசையை தயாரித்து உருளைக்கிழங்கு மசாலாக் கறியை வைத்து மடித்து மசாலாத்தோசை தயாரிக்கலாம் .
குறிப்பு :-
சாதாரண தோசை எனின் அரிசி மாவுக்கு பதிலாக மூன்று சுண்டு அவித்த கோதுமை மாவை இட்டுக் குழைத்துக் கொள்ளலாம் . ஆனால் கஞ்சி காய்ச்சத் தேவை இல்லை .
0 comments:
Post a Comment