20 - 25 அப்பம்
தேவையான பொருட்கள் :-
- பச்சை அரிசி - 1 சுண்டு
- தேங்காய் - 1
- அவித்த கோதுமை - 1/2 சுண்டு
- உப்பு - அளவிற்கு
- அப்பச்சோடா / ஈஸ்ட் - சிட்டிகை
செய்முறை :-
- அரிசியை கழுவி களைந்து 6 மணி நேரம் ஊறவைத்தெடுத்து முதலாம் தரம் இடித்து அரித்து வரும் குருணலில் 1/4 சுண்டு நடுத்தர குருனலை எடுத்து வேறாக வைத்துவிட்டு மிகுதிக் குருணல் முழுவதையும் இடித்தரித்து மாவை எடுத்துக் கொள்க .
- குருனலை பாத்திரத்தில் இட்டு நன்றாக பொங்கி கொதித்த 2 தம்ளர் கொத்தி நீரை ஊற்றி உடனடியாக நன்றாக கலக்கி 1/2 தம்ளர் குளிர் இரை சேர்த்து ( கட்டை கரையாமல் இருப்பதற்கு ) நன்றாக ஆறவைக்கவும் .
- பின்பு மாவை பிறிதொரு பாத்திரத்தில் இட்டு ஆரிய கஞ்சியை ஊற்றி அப்பச்சோடா, அளவிற்கு தண்ணீர் என்பன சேர்த்து , நீர்த்தன்மையான கூழ்ப் பதமாக கரைத்து 12 மணி நேரம்வரை புளிக்க வைத்து உப்பு சேர்த்து கரைத்து வைத்துக் கொள்க .
- தேங்காய் துருவி 2 தம்ளர் தன்னேர் சிறிது சிறிதாகவிட்டு கெட்டியான பாலாகப் பிழிந்தெடுத்துக் கொள்க .
- பின்பு எண்ணெய் பூசிய தாச்சியை அடுப்பில் வைத்து அப்பமாவை ஊற்றி ஒரு முறை சுற்றிக் கொண்டபின் 1 கரண்டி பாலைவிட்டு மூடி வேகவைத்தேடுக்க .
குறிப்பு :-
- அப்பத்தின் கரைகள் நன்றாக முறுக விட்டு எடுக்க வேண்டும்
- விரும்பினால் இனிப்புக்கு சர்க்கரை , அல்லது சீனி சேர்த்து தேங்காய் பாலுடன் கலந்து பயன்படுத்தலாம்
- இறுதியாக மாக்கரைசல் மிஞ்சினால் அதற்குள் 1 முட்டை சீனி கொஞ்சம் தேங்காய் பால் சேர்த்து ஒன்றாக கலந்து தாய்ச்ச்சியுள் ஊற்றி மூடி வட்டிலப்பமாக எடுத்து சாப்டலாம் .
- தேங்காய் பாலுக்கு சிறிது ஏலக்காய் பவுடரை சேர்த்து பாவித்தல் வாசனையாகவும் , மிதமான சுவையையும் கொடுக்கும் .
0 comments:
Post a Comment