2-3 பேருக்கு போதுமானது .
தேவையான பொருட்கள் :-
- ரவ்வை - 250 கிராம்
- கரட் - 100 கிராம்
- லீட்ஸ் - 100 கிராம்
- உருளை கிழங்கு - 250 கிராம்
- சிறிதாக வெட்டிய கறிவேப்பிலை - 1 மேசை கரண்டி ( நிரப்பி )
- மாஜரின் - 1 மேசை கரண்டி நிரப்பி அல்லது நல்லெண்ணெய் 3 மே .க.
- சிறிதாக வெட்டிய வெங்காயம் - 3 மேசை கரண்டி ( நிரப்பி )
- சிறிதாக வெட்டிய பச்சை/ செத்தல் மிளகாய் - 2 மேசை கரண்டி ( நிரப்பி )
- மிளகு தூள் - அளவிற்கு
- உப்பு தூள் - அளவிற்கு
- கொதி நீர் அல்லது ஒரு பாதி தேங்காயில் பிழிந்த பால் - 1- 11/2 தம்ளர்
செய்முறை :-
- ரவையை அரித்து சிறிதாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்க .
- கரட் , லீட்ஸ் ஆகியவற்றை கழுவிச் சிறிதாக வெட்டிக் கொள்க .
- உருளை கிழங்கை தோல் நீக்கி சிறு துண்டுகளாக வெட்டி கழுவி வைத்துக் கொள்க .
- தாச்சியில் ஒரு மேசை கரண்டி மஜரினை இட்டு உருகி கொதித்ததும் , அதனுள் வெட்டிய உருளை கிழங்கு , கரட் , லீட்ஸ் வெங்காயம் மிளகாய் கறிவேப்பிலை வகைகளை போட்டு வதங்க விட்டு உருளை கிழங்கு வதங்கியபின் உப்பு . மிளகு தூள் போட்டு சேர்த்து பிரட்டி மூடி சிறிது நேரம் வதங்க விடவும் .
- சிறிது நேரத்தில் இதனுள் வறுத்து வைத்துள்ள றவ்வையை கொட்டிக் கிளறி கொத்தி நீர் அல்லது தேங்காய் பால் 1 தம்ளர் விட்டு கரண்டியால் நன்கு சேர்த்துக் கிளறி , அடுப்பில் இருந்து இறக்கி வேறு ஒரு பாத்திரத்தில் கொட்டிக் கொள்ளவும் .
குறிப்பு :-
- பிடித்தமானவர்கள் கடுகு 1 தே. கரண்டி , பெருஞ்சீரகம் 1 தே. கரண்டி சேர்த்து மரக்கறிகளுடன் வதங்க விடலாம் . வாசனையாக இருக்கும் .
- உப்புமாவை பரி மாறும் போது விரும்பினால் 2 முட்டைகளை அவித்து சிறிய துண்டுகளாக வெட்டி சேர்த்துக் கொள்ளலாம் .
- அல்லது முட்டைகளை உப்பு சிறிதளவு மிளகாய் / மிளகு தூள் போட்டு வறுத்து சேர்த்து கொள்ளலாம் .
- அலது மரக்கறி வகைகள் நன்கு வேகி வந்தவுடன் இரண்டு முட்டைகளை அதனுள் அடித்து ஊற்றி நன்கு கிளறி சேர்த்துக் கொண்ட பின்பு ரவ்வை கொட்டி கிளறிக் கொள்ளவும் .
- அல்லது 20 - 25 இறால் வரை பொரித்து சேர்த்துக் கொள்ளலாம் .
0 comments:
Post a Comment