கறி மிளகாய் தூள் தயாரிக்கும் முறை

 Untitled-1-1_zpsccdbd618.jpg 



11/2 கி.கிராம் தூள் கிடைக்கும்

தேவையான பொருட்கள்
  1. செத்தல் மிளகாய் - 500 கிராம்
  2. மல்லி - 400 - 500 கிராம்
  3. பெருஞ்சீரகம் - 100 கிராம்
  4. மிளகு - 50 கிராம்
  5. சிறிதாக வெட்டிய மஞ்சள் - 25 கிராம்
  6. கடுகு - 1 மே. க. ( நிரப்பி )
  7. வெந்தயம் - 1 மே. க . ( நிரப்பி )
  8. நற்சீரகம் - 2 மே . க ( நிரப்பி )
  9. இறைச்சி சரக்கு - 2 பக்கட் ( சிறியது )
  10. கறிவேப்பிலை - 10 நெட்டு

செய்முறை :-
  • மிளாகாய் , மல்லி , பெருஞ்சீரகம் ஆகியவற்றை துப்பரவு செய்து தனி தனியாக கழுவி காய வைத்து எடுத்துக் கொள்க . 

  • மிளகாயின் காம்பை நீக்கிவிட்டு  சிறு சிறு துண்டுகளாக வெட்டி கையால் நன்கு கசக்கி கொண்டபின் , மிளகாய் விதைகள் வேறாகவும் , மிளகாய் தோல் வேறாகவும் பிரித்து எடுத்துக் கொள்க . ( விதைகளை வேறாக எடுக்கா விடல் வறுக்கும்போது கருகிவிடும் ) 

  • பின்பு தாச்சியை அடுப்பில் வைத்து சூடானதும் மல்லியை இட்டு வறுக்கவும் . மல்லி சரியாக வறுக்கபட்டிருப்பின் விரல்களின் இடையே வைத்து நசுக்கி பார்க்கும் போது தூளாக உதிரும் பருவத்தில் மல்லியை எடுத்துக் கொள்க .மீண்டும் தாய்ச்சியில் பெருஞ்சீரகத்தை போட்டு வறுத்து , விரல்கள் இடையே வைத்து நசிக்கும் போது உதிரும் பருவத்தில் எடுத்துக் கொள்க . 

  • மீண்டும் தாய்ச்சியில் நற்சீரகம் , மிளகு , வெந்தயம் , கடுகு , இறைச்சி சரக்கு , மஞ்சள் . கச்சான் முத்து , கறிவேப்பிலை என்பவற்றை போட்டு வறுத்துக் கறிவேப்பிலை முறுகிய பதத்தில் எடுத்துக் கொள்க  

  • இவ் வண்ணமே மிளகாய் விதைகளைத் தனியாக பொன் நிறமாக வேருத்தேடுத்துக் கொள்க . மிளகாய்த் தோலை தனியாக நன்றாக சூடாகும்வரை  வறுத்தெடுத்து  கொள்க . 

  • பின்பு வறுத்த மல்லி , பெருஞ்சீரகம் , மிளகு , வெந்தயம் , கடுகு , இறைச்சி சரக்கு , மஞ்சள் , கச்சான் முத்து , கறிவேப்பிலை , மிளகாய் விதை , மிளகாய் தோல்  என்பவற்றை ஒன்றாக சேர்த்து நன்கு கலந்து திரித்தெடுத்து  நன்றாக ஆற வைத்து அரித்தெடுத்துக் கொள்க . 

  • காற்று புகாத ஜாடியில் அடைத்து வைத்துப் பயன்படுத்தலாம் .

குறிப்பு :-

விரும்பினால் ஒரு பிடி உழுந்து , அரிசி , கடலைப் பருப்பு , கச்சான் முத்து  என்பவற்றை வறுத்து சேர்த்துக் கொள்ளலாம் .

0 comments:

Post a Comment

Flag Counter