
2 - 3 பேருக்கு போதுமானது
தேவையான பொருட்கள் :
செய்முறை :
குறிப்பு :
வேர்க்கொம்பு , மஞ்சள் , மிளகு , சீரகத்தூள்கள் இருப்பின் கிரைண்டரில் இட்டு அளவிற்கு தண்ணீர் சேர்த்து அரைத்து மேற்கூறிய முறையில் தயாரித்துக் கொள்ளலாம் .
தேவையான பொருட்கள் :
- சீரகம் - 25 கிராம்
- மஞ்சள் - 1 துண்டு
- மிளகு - 10
- வேர்க்கொம்பு - 1துண்டு
- உள்ளி - 3 பல்லு
- பழப்புளி - பாக்களவு
- உப்பு - அளவிற்கு முட்டை - 2 அல்லது அவித்த சுறா மீன் 4 துண்டு
- நல்லெண்ணெய் - 2 மே. க
- தண்ணீர் - 2 தம்ளர்
செய்முறை :
- அம்மியை துப்புரவு செய்து வேர்க்கொம்பு , மஞ்சள் என்பவற்றை நொறுக்கி அரைத்து பின் உள்ளி , மிளகு , சீரகம் என்பவற்றை சேர்த்து சிறிதளவு தண்ணீரும் விட்டு பசுந்தையாக அரைத்தெடுத்துக் கொள்க .
- அரைத்த கூட்டை தாய்ச்சியில் இட்டு 2 தம்ப்ளர் தண்ணீரில் கரைத்த புளிகரைசலை விட்டு நன்கு கரைத்து அடுப்பில் வைத்து , பொங்கி கொதித்ததும் அளவிட்ட்கு உப்பு சேர்த்து முட்டையை உடைத்துவிட்டு முட்டை அவிந்து வரும் நிலையில் நல்லெண்ணெய் சேர்த்து இறக்கி சூட்டுடனேயே பரி மாறலாம் .
குறிப்பு :
வேர்க்கொம்பு , மஞ்சள் , மிளகு , சீரகத்தூள்கள் இருப்பின் கிரைண்டரில் இட்டு அளவிற்கு தண்ணீர் சேர்த்து அரைத்து மேற்கூறிய முறையில் தயாரித்துக் கொள்ளலாம் .
0 comments:
Post a Comment